இந்தியா

காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா தகவல்

காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2008 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாட்டல் செக்டரில் நடத்தப்பட்டதாக கூறினார்.இது தவிர, 2011, 2013, 2014 ஆம் ஆண்டுகளிலும் சர்ஜிகல் ஸ்ட்டிரைக் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஆறு முறை சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியும் அரசியலுக்காகவும், தேர்தலுக்காகவும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அதனை பயன்படுத்தவில்லை என்றும், ஆனால் பாஜக அரசு, ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தி விட்டு, அதை அரசியலுக்காக பயன்படுத்தி வருவதாக ராஜீவ் சுக்லா குற்றஞ்சாட்டினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி