கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் மழை பெய்து வரும் நிலையில் பேருந்துக்குள் அதிகமாக மழை கொட்டியது. இதனால் பேருந்தை ஓட்ட முடியாமல் ஓட்டுநர் அவதிப்பட்டார். அவருக்கு உதவும் வகையில் நடத்துனர் குடை பிடித்ததால் பேருந்தை பாதுகாப்பாக ஓட்டுநர் இயக்கினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.