இந்தியா

காந்தி ஜெயந்தி அன்று தொடக்கம் - பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்

தந்தி டிவி

புதுச்சேரியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது. புதுச்சேரி விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜூன் மாதம் மூடப்பட்டு, விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் அக்டோபர் 2ம் தேதி முதல் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்குவதாக விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. புதுச்சேரியிலிருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்