இந்தியா

தமிழகத்திற்கு எல்லா வகையிலும் உதவ பிரதமர் மோடி தயாராக உள்ளார் - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடி தமிழகத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை கொடுக்க தயாராக உள்ளார், அதனை பெற நாம் தயாராக வேண்டும்

தந்தி டிவி

தமிழகத்திற்கு எல்லா வகையிலும் உதவ பிரதமர் மோடி தயாராக உள்ளதாகவும், அதனை பெறுவதற்கு நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை, பெங்களூரு இடையே வாரம் 6 நாட்கள் இயங்கும் உதய் விரைவு ரயில் சேவையை ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் ராஜன் கோகைன், மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை புதுப்பாளையம், வீரப்பாண்டி ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, தமிழகத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை கொடுக்க தயாராக உள்ளதாகவும், அதனை பெற நாம் தயாராக வேண்டும் எனவும் கூறினார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்