இந்தியா

முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெயர் பலகை மூடல் - பூங்கா புனரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்

தந்தி டிவி

முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெயர் பலகை மூடல் - பூங்கா புனரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தம்

பெங்களூருவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயர் பலகை மூடப்பட்டதால், பூங்கா புனரமைப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அல்சூரில் பூங்கா புனரமைப்பு பணியின் போது முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெயர் பலகை மூடப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், பூங்காவில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

உடனடியாக பூங்கா புனரமைப்பு பணிகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் எடயூரப்பா பெயர் பலகையை மறைத்து கட்டப்பட்ட கட்டுமானத்தை இடித்து தள்ளினர்.

பெங்களூரு தமிழ் சங்கம், காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் கோரிக்கையை அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ