மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு பேச்சு - நூதன தண்டனை
மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய சோசியல் மீடியா பிரபலங்களுக்கு சுந்தர்.சி-யின் ஆயுதம் செய்வோம் பட பாணியில் நூதன தண்டனையை புதிய உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் வழங்கினார்.
இந்தி பேசும் மாநிலங்களில் சோசியல் மீடியா பிரபலங்கள், ஒரு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசினர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த புதிய உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த், அவதூறாக பேசிய சோசியல் மீடியா பிரபலங்கள் மாதம் இருமுறை மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்... அதில் வரும் நிதியை மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.