இந்தியா

சீனாவைச் சேர்ந்த 47 செயலிகளை விரைவில் தடை செய்ய வாய்ப்பு

சீனாவைச் சேர்ந்த 47 செல்போன் செயலிகளை இந்தியா விரைவில் தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக சீனாவைச் சேர்ந்த, டிக் டாக் உள்ளிட்ட 59 செல்போன் செயலிகள் கடந்த மாதத்தில் தடைச் செய்யப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் 47 செயலிகள் தடை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறைபாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான 250 செயலிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த செயலிகளை மத்திய அரசு தடை செய்து வருகிறது. இந்தியா- சீனா இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், வர்த்தக செயல்பாடுகளிலும் சிக்கல் நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்