இந்தியா

கணவன் - மனைவி சண்டையால் 7 மாத பெண் குழந்தையை ரூ.1000-க்கு விற்க முயன்ற பெண்

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டையால் 7 மாத பெண் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
தெலுங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டையால், 7 மாத பெண் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரங்கல் பேருந்து நிலையத்தில், ஜெனகாமா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையால், ஏழு மாத பெண் குழந்தையை விற்பதாக கூறி, கூவி கூவி குழந்தையை விற்றார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த மக்கள் அளித்த தகவலை அடுத்து, போலீசார் குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் குழந்தையை விற்கவில்லை என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?