இந்தியா

கணவன் - மனைவி சண்டையால் 7 மாத பெண் குழந்தையை ரூ.1000-க்கு விற்க முயன்ற பெண்

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டையால் 7 மாத பெண் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
தெலுங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட சண்டையால், 7 மாத பெண் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரங்கல் பேருந்து நிலையத்தில், ஜெனகாமா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையால், ஏழு மாத பெண் குழந்தையை விற்பதாக கூறி, கூவி கூவி குழந்தையை விற்றார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த மக்கள் அளித்த தகவலை அடுத்து, போலீசார் குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் குழந்தையை விற்கவில்லை என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்