ஓசூர், அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திமுக நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குழுந்தையின் உடல் பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை காரணமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விசாரணையில் கோம்மைகாடு கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி பெரியநாயகம் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது. அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த குழந்தையின் தாயை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.