இந்தியா

குஜராத்தில் குழந்தை கடத்த வந்ததாக கருதி இளைஞர் மீது தாக்குதல்

இளைஞரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து சரமாரியாக தாக்கினர்.

தந்தி டிவி
குஜராத்தில் குழந்தை கடத்தல்காரர் என நினைத்து இளைஞர் ஒருவரை ​பொதுமக்கள் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜ்காட் அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், விடுமுறையை கழிப்பதற்காக அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு விளையாடி கொண்டிருந்த ஒரு குழந்தையிடம் அவர் பேசியதை கண்ட கோயில் பூசாரி ஒருவர், பொதுமக்களுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு திரண்ட ஏராளமானோர் இளைஞரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அந்த இளைஞரை போலீசார் மீட்டு சென்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்