இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகாய் : குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழா

உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றார்.

தந்தி டிவி

குடியரசு தலைவர் மாளிகையில் தலைமை நீதிபதியின் பதவி ஏற்பு விழா நடந்தது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ரஞ்சன் கோகாய்க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2012ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகாய், 6 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரது பதவிகாலம் அடுத்தாண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை உள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"