இந்தியா

8 வழி பசுமை சாலைத் திட்டம் : வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் புகார்

சேலம் - சென்னை 8 வழி பசுமைசாலை திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமைசாலை அமைக்கும் திட்டத்துக்காக கடந்த 3 நாட்களாக

நிலம் அளவீடு மற்றும் முட்டுக்கல் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் மஞ்சவாடியில் துவங்கி அடிமலைபுதூர், கத்தரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி குப்பனூர் வழியாக சீரிக்காடு வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு முட்டுக்கல் நடும் பணிகள் நிறைவுற்றன.

இரண்டாவது கட்டமாக வெள்ளியம்பட்டி தொடங்கி குள்ளம்பட்டி , மின்னாளம்பள்ளி ஆகிய கிராமங்களில் நிலம் அளவீடு செய்யும் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 8 வழி பசுமைசாலை திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ