இந்தியா

8 வழி பசுமை சாலைத் திட்டம் : வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் புகார்

சேலம் - சென்னை 8 வழி பசுமைசாலை திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமைசாலை அமைக்கும் திட்டத்துக்காக கடந்த 3 நாட்களாக

நிலம் அளவீடு மற்றும் முட்டுக்கல் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் மஞ்சவாடியில் துவங்கி அடிமலைபுதூர், கத்தரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி குப்பனூர் வழியாக சீரிக்காடு வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு முட்டுக்கல் நடும் பணிகள் நிறைவுற்றன.

இரண்டாவது கட்டமாக வெள்ளியம்பட்டி தொடங்கி குள்ளம்பட்டி , மின்னாளம்பள்ளி ஆகிய கிராமங்களில் நிலம் அளவீடு செய்யும் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 8 வழி பசுமைசாலை திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்