இந்தியா

8 வழி பசுமை சாலைத் திட்டம் : வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் புகார்

சேலம் - சென்னை 8 வழி பசுமைசாலை திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமைசாலை அமைக்கும் திட்டத்துக்காக கடந்த 3 நாட்களாக

நிலம் அளவீடு மற்றும் முட்டுக்கல் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் மஞ்சவாடியில் துவங்கி அடிமலைபுதூர், கத்தரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி குப்பனூர் வழியாக சீரிக்காடு வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு முட்டுக்கல் நடும் பணிகள் நிறைவுற்றன.

இரண்டாவது கட்டமாக வெள்ளியம்பட்டி தொடங்கி குள்ளம்பட்டி , மின்னாளம்பள்ளி ஆகிய கிராமங்களில் நிலம் அளவீடு செய்யும் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 8 வழி பசுமைசாலை திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்