இந்தியா

8 வழி பசுமை சாலைத் திட்டம் : வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் புகார்

சேலம் - சென்னை 8 வழி பசுமைசாலை திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமைசாலை அமைக்கும் திட்டத்துக்காக கடந்த 3 நாட்களாக

நிலம் அளவீடு மற்றும் முட்டுக்கல் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் மஞ்சவாடியில் துவங்கி அடிமலைபுதூர், கத்தரிப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி குப்பனூர் வழியாக சீரிக்காடு வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு முட்டுக்கல் நடும் பணிகள் நிறைவுற்றன.

இரண்டாவது கட்டமாக வெள்ளியம்பட்டி தொடங்கி குள்ளம்பட்டி , மின்னாளம்பள்ளி ஆகிய கிராமங்களில் நிலம் அளவீடு செய்யும் பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 8 வழி பசுமைசாலை திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்