இந்தியா

8 காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல்

சென்னை மாநகரில் போலீசார் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 காவலர்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தந்தி டிவி

* சென்னை அபிராமிபுரம் காவல் ஆய்வாளர் அஜூ , அதிமுக மாநில இளைஞரணி இணை செயலாளர் ஏ.கே. முகிலின் மகன் கவிமுகிலால் என்பவரால் தாக்கப்பட்டார்.

* ஓட்டேரியில் 8 காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல், ரோந்து வாகனத்தை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

* மதுரவாயல் தலைமை காவலர் அன்பழகன் ரோந்து பணியின்போது ரவுடி கும்பலால் வெட்டப்பட்டதாக தெரிகிறது.

* டொக்கன் ரவி என்ற ரவுடியை பிடிக்க சென்ற போது, மயிலாப்பூர் உதவி ஆய்வாளர் இளையராஜா தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, செம்பியம் நுண்ணறிவு பிரிவு காவலர் சிவலிங்கத்தை வழிப்பறி கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

* அதேபோல், பரங்கிமலை நுண்ணறிவு பிரிவு காவலர் ராஜசேகர் வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டார்.

* மெரினாவில் ஆயுதப்படை காவலர் மாரிக்கண்ணன் மீது நடத்திய தாக்குதலில் அவரது கை உடைந்தது.

* எழும்பூரில் உதவி ஆய்வாளர் சம்பத் மீது வழிப்பறி கொள்ளையர்கள் பிளேடால் தாக்குதல் நடத்தினர்.

இந்த 9 சம்பவங்களில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 16 பேர் சிறிய மற்றும் பெரிய அளவிலான காயங்கள் அடைந்திருப்பதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்