இந்தியா

"சந்திராயன் 3 திட்டம் இந்தாண்டு செயல்படுத்த முடியாது" - இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு

கொரோனா எதிரொலியாக ககன்யான் மற்றும் சந்திராயன் 3 திட்டங்களை திட்டமிட்டபடி இந்த ஆண்டு செயல்படுத்த முடியாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தொற்றின் எதிரொலியாக நாடு முழுவதும் முடக்கப்பட்ட நிலையில், அதன் பாதிப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திலும் எதிரொலித்துள்ளது. இஸ்ரோவின் முக்கிய திட்டங்களாகயிருந்த ககன்யான் மற்றும் சந்திராயன் 3 ஆகிய திட்டங்கள் செயல்படுத்துவதில் 6 மாதம் வரை கால தாமதம் ஏற்படலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் 2021ல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்த இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் வியோம் மித்ர் ரோபோவை கொண்டு ககன்யான் திட்டத்தின் சோதனைகள் நடத்தப்பட இருந்தது. ஆனால் ‌ தற்போதுள்ள சூழலில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் 5 முதல் 6 மாதம் வரை கால தாமதம் ஏற்படலாம் எனவும் இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை