இந்தியா

நிலவின் மிக நெருக்கமான புகைப்படம் வெளியீடு

சந்திரயான் - 2 விண்கலம், நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை எடுத்து, அனுப்பி உள்ளது.

தந்தி டிவி
சந்திரயான் - 2 விண்கலம், நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை எடுத்து, அனுப்பி உள்ளது. இந்த புகைப்படங்களை, இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டது. நிலவின் பல்வேறு பகுதிகளை, அடையாளப்படுத்தி, அறியும் வகையில், இந்த புகைப்படங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. 100 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில், 14 கிலோ மீட்டர் நீளமும், 3 கிலோ மீட்டர் விட்டமும் கொண்ட போகஸ்லாவ்ஸ்கி பள்ளத்தின் ஒரு பகுதி, பதிவாகி இருக்கிறது. உயர் தெளிவு திறன் கொண்ட கேமிரா மூலம், இக்காட்சிகள், படம் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நிலவின் தரைப்பகுதியில் மின்காந்த துகள்கள் இருப்பதை ஆர்ப்பிட்டர் கண்டுபிடித்ததாக இஸ்ரோ, தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்