இந்தியா

விக்ரம் லேண்டர் ஆயுள்காலம் இன்றுடன் முடிவு

நிலவில் தரையிறங்கி, ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் இன்றுடன் முடிகிறது.

தந்தி டிவி

நிலவில் தரையிறங்கி, ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம், இன்றுடன் முடிகிறது. அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. நிலவில் தரை இறங்கும் போது 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். இதில் அமெரிக்காவின் நாசாவும் களம் இறங்கியது. ஆனாலும் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. இந்நிலையில், இன்று முதல்,14 புவி இரவுகள், நிலவின் தென் பகுதியில் துவங்க உள்ளதாகவும், அந்த சமயத்தில் நிலவில் உறை வெப்பநிலை மைனஸ் 240 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆனாலும் நிலவை சுற்றி பயணித்து, ஆர்ப்பிட்டரின் தனது ஆய்வை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?