இந்தியா

சந்திரயான்- 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் பாராட்டு

இந்தியாவின் சாதனை திட்டமான சந்திரயான்-2 விண்கலம், இன்று பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தந்தி டிவி

கடந்த 15 ஆம் தேதி, சந்திரயான் 2 விண்கலம், விண்ணில் செலுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் கவுண்டவுன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு, நேற்று மாலை 6 மணி 43 நிமிடங்களுக்கு சந்திராயன் - 2 விண்கலத்தின் கவுண்ட்டவுன் துவங்கியது. இதனை தொடர்ந்து, பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களுக்கு சந்திரயான்-2 விண்ணில் பாய்ந்தது. விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை