இந்தியா

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் : நேரலை ஒளிபரப்பு செய்ய மத்திய அரசு சம்மதம்

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இது தொடர்பான பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் மனுதாரரின் கோரிக்கையை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளின் விசாரணையை தவிர, ஏனைய வழக்கு விசாரணையை நேரலை ஒளிபரப்பு செய்ய அரசு சம்மதம் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அப்போது பேசிய நீதிபதிகள் தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ப நேரலை ஒளிபரப்பு அவசியம் என குறிப்பிட்டனர்.

இதனை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்து அறிக்கையாக ஜூலை 23ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"