இந்தியா

"திருவிழா காலங்களினால், கொரோனா பாதிப்பு அதிகரிப்பு" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

திருவிழா காலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

திருவிழா காலங்களில், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண், கடந்த ஐந்து வாரங்களாக கொரோனா பாதிப்பின் தினசரி புதிய இறப்புகளில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டுள்ளது என்றார். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 58 சதவிகிதம், புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு