இந்தியா

அயோத்தி விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை

அயோத்தி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இட விவகாரம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மைய பிரச்னையான பூஜ்யம் புள்ளி 3 ஏக்கர் நிலத்தை தவிர அதைச்சுற்றி உள்ள 67 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அனுமதி கோரி, மத்திய அரசு நேற்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு மத்திய அரசு இன்று விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு