இந்தியா

"வங்கிகள் விடுமுறை என்ற தகவல் உண்மையில்லை" வதந்திகளை நம்ப வேண்டாம் - மத்திய அரசு அறிவிப்பு

செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட காரணங்களால் செப்டம்பர் முதல் வாரம் வங்கிகள் இயங்காது என சமூக வலைத்தளங்களில்

செய்திகள் வந்தது. இந்த நிலையில் இந்த செய்திகளில் உண்மையில்லை என்றும் யாரும் அதை நம்ப வேண்டாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வரும் 2ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மட்டுமே விடுமுறை என்றும், 3ஆம் தேதியான திங்கட்கிழமை சில மாநிலங்களில் மட்டுமே விடுமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 8ஆம் தேதி

இரண்டாம் சனிக்கிழமையன்று மட்டுமே விடுமுறை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் கூட அனைத்து

ஏடிஎம்களும் செயல்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்