இந்தியா

நிலுவை ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க ரூ. 10 லட்சம் லஞ்சம் : மத்திய ஆயுஷ் அமைச்சக அதிகாரி கைது

நிலுவையிலுள்ள ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்க 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மத்திய ஆயுஷ் அமைச்சக அதிகாரியை சி.பி.ஐ. போலீசார் கைதுசெய்தனர்.

தந்தி டிவி

மத்திய 'ஆயுஷ்' அமைச்சகத்தில் சார்பு செயலாளராக பணியாற்றி வருபவர் ஆர்.கே.காத்ரி. இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார். இந்நிலையில், நிலுவையில் உள்ள ரசீதுகளுக்கு ஒப்புதல் வழங்குமாறு மருந்து பொருட்களை விற்பனை முகவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு 10 லட்சம் ரூபாய் லஞ்சம் தருமாறு ஆர்.கே. காத்ரி கேட்க, அந்த முகவர் சி.பி.ஐ-யிடம் புகார் அளித்துள்ளார். ரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்ட ஆர்.கே.காத்ரியை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை