இந்தியா

உன்னாவ் விவகாரம்: விரைவில் சி.பி.ஐ. விசாரணை அறிக்கை தாக்கல் என தகவல்

உன்னாவ் விவகாரத்தில் சிபிஐ விரைவில் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறிய அந்த சிறுமியின் தந்தை போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கார் விபத்தில் சிறுமியின் உறவினர்கள் 2 பேர் உயிரிழந்தனர். வழக்கறிஞர் படுகாயமடைந்தார். குல்தீப் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்தது. சிபிஐ விரைவில் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி