இந்தியா

உன்னாவ் விவகாரம்: விரைவில் சி.பி.ஐ. விசாரணை அறிக்கை தாக்கல் என தகவல்

உன்னாவ் விவகாரத்தில் சிபிஐ விரைவில் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறிய அந்த சிறுமியின் தந்தை போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கார் விபத்தில் சிறுமியின் உறவினர்கள் 2 பேர் உயிரிழந்தனர். வழக்கறிஞர் படுகாயமடைந்தார். குல்தீப் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்தது. சிபிஐ விரைவில் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை