இந்தியா

பணப்புழக்கம் ரூ.20 லட்சம் கோடியை தாண்டியது - இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளில் பண புழக்கம் 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

தந்தி டிவி
கடந்த இரண்டு ஆண்டுகளில் பண புழக்கம் 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு முன்பு 17 லட்சத்து 97 ஆயிரம் கோடியாக பணப்புழக்கம் இருந்தது எனவும், தற்போது, புதிதாக 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், பணப்புழக்கம் 20 லட்சத்து 15 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது, கடந்த மாதம் 16ம் தேதி வரையிலான புள்ளி விபரம் எனவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்