இந்தியா

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு: ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் மனு தாக்கல்

370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதனை எதிர்த்து ஓய்விபெற்ற பாதுகாப்பு படை மற்றும் பணித்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். ராதாகுமார், ஹிந்தல் ஹைதர் தயப்ஜி, கபில் கக், அசோக் குமார் மேத்தா, அமிதாவா பாண்டே, கோபால் பிள்ளை, ஆகியோர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களைத் தவிர, புகழ்பெற்ற காஷ்மீரி நாடகக் கலைஞர் இந்தர் சலீம், பத்திரிகையாளர் சதீஷ் ஜேக்கப் ஆகிய இருவரும் இணைந்து ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி