இந்தியா

பாம்பு கடித்து சுயநினைவு இழந்த சிறுவன் - போராடி காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

வேலூரில் பாம்பு கடித்து சுயநினைவு இழந்த சிறுவனை மருத்துவர்கள் போராடி காப்பாற்றினர்.

தந்தி டிவி

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் சுனில், 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். இரவு வீட்டின் வெளியே படுத்திருந்த அந்த

சிறுவனை கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு ரத்தம் உறைந்து, நரம்புகள்

செயலிழந்தன. இதனால் சுயநினைவு இழந்து மருத்துவமனையில் உயிருக்கு

போராடிய சிறுவன் சுனிலை, மருத்துவர்கள் போராடி உயிரை காப்பாற்றினர். நம்பிக்கை இழந்த நிலையில் இருந்து பெற்றோர், சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்