இந்தியா

"சோதனைச் சாவடியில் குண்டு வெடிக்கும்.. 100 பேரின் உயிர் போகும்" பார்டர் தாண்டி போன மிரட்டல்..

தந்தி டிவி

திருப்பதி சோதனைச் சாவடியில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த, சேலத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனைச் சாவடியில் குண்டு வெடித்து 100 பேராவது உயிரிழப்பர் என, கடந்த 15ஆம் தேதி தொலைபேசி முலம் மிரட்டல் வந்த‌து. இதையடுத்து சோதனை செய்த போது வெடிகுண்டுகள் ஏதும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மிரட்டல் அழைப்பு சேலத்தை சேர்ந்த, தனியார் வங்கி ஊழியரான பாலாஜி என்பவரின் தொலைபேசியில் இருந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு