வங்கி மோசடி வழக்கில் தப்பி ஓடிய மெகுல் சோக்சியை நாடு கடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை டொமினிகா நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது, சோக்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சோக்சியை நேரடியாக நாடு கடத்த முடியாது என வாதாடினார். இதனிடையே, சோக்சியை டொமினிகா கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு எதிரானது என்றும், விசாரணையில் இந்திய அரசு குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் சோக்சியின் இந்திய வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறி உள்ளார்.