இந்தியா

கேரளாவில் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று; மியூகோர்மைகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்று

கேரளாவில் ஏழு பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் ஏழு பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது சமீபத்தில் கண்டறியப்பட்டது. காற்றில் உள்ள பூஞ்சை துகள்களால் ஏற்படும் இந்த நோய், புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஏழு பேருக்கு, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை எளிதில் தாக்கக் கூடிய இந்த நோயால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டும் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை தலைவர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை