இந்தியா

பா.ஜ.க. மாநில தலைவர்களிடம் வாஜ்பாய் அஸ்தி ஒப்படைப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அஸ்தி அடங்கிய கலசங்களை, அந்தந்த மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

தந்தி டிவி
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறுதிச் சடங்குகள், கடந்த வெள்ளியன்று டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து, அவரது அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில், வாஜ்பாயி அஸ்தியை கரைக்க பா.ஜ.க. முடிவு செய்தது. அதன்படி, வாஜ்பாயி அஸ்தி அடங்கிய கலசங்களை, அந்தந்த மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"