இந்தியா

பா.ஜ.க. முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ராஜினாமா

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என பா.ஜ.க. தெரிவித்துள்ளது. போபாலில் செய்தியாளர்களை சந்தித்த, தற்போதைய முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் இந்த தகவலை தெரிவித்தார். ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை, தங்கள் கட்சிக்கு இல்லை எனவும், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிப்பதாகவும் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகை சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக கூறிய சிவராஜ் சிங் சவுகான், காங்கிரசை சேர்ந்த கமல்நாத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை