மக்களவையில் பிறப்பு, இறப்பு பதிவுகள் திருத்த மசோதா அறிமுகம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.... பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா தாமதமான பதிவுகளைத் தடுத்தல், மோசடிகளைக் குறைத்தல் மற்றும் நீதித்துறை ஒப்புதலைப் பெறுதல் போன்ற முக்கிய விதிகளைக் கொண்டுவரும் ஒரு புதிய சட்டமாகும்..... மசோதா நிறைவேறும்பட்சத்தில் இனி பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்யப்படாமல் இருந்தால், முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் (First Class Judicial Magistrate) முறையான ஆணை பெறப்பட வேண்டும்.... போலிப் பதிவுகளைத் தவிர்த்து, உண்மையான நிகழ்வுகளுக்கு மட்டும் உரிய முறையான சட்டப் பாதுகாப்பு வழங்க இந்த மசோதா மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது...