#raghavchadha #aamaadmiparty #bhagwantmann
ராகவ் சதாவை கடுமையாக விமர்சித்த பகவந்த் மான்
பஞ்சாப் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிட்டுச் சென்றவர்களுக்கு பாஜகவிலும் உரிய இடம் கிடைக்காது என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சாடியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய ஏழு ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவில் இணை இருப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே மற்ற கட்சிகளிலிருந்து பாஜகவிற்குச் சென்றவர்கள் அங்கு அடையாளமின்றி ஓரங்கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த 7 பேரின் கதியும் அதுதான் என எச்சரித்த அவர், பாஜகவின் 'பயன்படுத்தி விட்டு தூக்கியெறியும்' அரசியலில் இவர்களின் எதிர்காலம் முடிந்துவிடும் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.