இந்தியா

பெங்களூருவுக்கு தாமதமாக ரயில் வந்ததால் 600 மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை : மீண்டும் வாய்ப்பு வழங்க கோரிக்கை

பெங்களூருவில், ரயில் தாமதமாக வந்த காரணத்தால், 600 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தந்தி டிவி

பெங்களூருவில், ரயில் தாமதமாக வந்த காரணத்தால், 600 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பெல்லாரி மாவட்டத்தில் இருந்து 4 மணி நேரம் தாமதமாக நேற்று முன் தினம் புறப்பட்ட ஹம்பி ரயில், நடுவழியில் சிக்னல் காரணமாக நிறுத்தப்பட்டு மொத்தமாக 7 மணி தாமதத்திற்கு பின், அடுத்த நாள் மதியம் 1 மணி அளவில் தான் பெங்களூரு வந்தடைந்துள்ளது. இதனால், ரயிலில் பயணம் செய்த 600 மாணவர்களும், நீட் தேர்வு எழுத முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு