இந்தியா

மெட்ரோவுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு | bengaluru | Metro

தந்தி டிவி

பெங்களூரு மெட்ரோ மூன்றாம் கட்ட திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பெங்களூரு மெட்ரோ மூன்றாம் கட்ட திட்டத்தின் கீழ் இரண்டு புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்...

ஜேபி நகர் முதல் கெம்பாபுரா வரையிலான முதல் வழித்தடத்திற்கும் ஹோசஹல்லி - கடபாகரே இடையிலான இரண்டாம் வழித்தடத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த திட்டத்திற்கான மொத்த செலவு15 ஆயிரத்து 611 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் பூனே மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்க திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது...

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்