இந்தியா

மெட்ரோவுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு | bengaluru | Metro

தந்தி டிவி

பெங்களூரு மெட்ரோ மூன்றாம் கட்ட திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பெங்களூரு மெட்ரோ மூன்றாம் கட்ட திட்டத்தின் கீழ் இரண்டு புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்...

ஜேபி நகர் முதல் கெம்பாபுரா வரையிலான முதல் வழித்தடத்திற்கும் ஹோசஹல்லி - கடபாகரே இடையிலான இரண்டாம் வழித்தடத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த திட்டத்திற்கான மொத்த செலவு15 ஆயிரத்து 611 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் பூனே மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்க திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை