இந்தியா

Bank | புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் - உங்க பேங்க்ல எப்படி இருக்கு? செக் பண்ணி பாத்தீங்களா?

தந்தி டிவி

காசோலைகளை ஒரே நாளில் பணமாக்கும் புதிய நடைமுறையில் சில சிக்கல்கள் இருந்தாலும், அவை தீர்க்கப்பட்டு வருவதாக, N.P.C.I. எனப்படும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் காசோலைகளை, அது எந்த வங்கியின் காசோலையாக இருந்தாலும் ஒரே நாளில் பணமாக்கும் புதிய நடைமுறையை கடந்த 4ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், இதுவரை மத்திய அமைப்பு மூலம் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள 2 கோடியே 56 லட்சம் காசோலைகள் பணமாக்குவதை எளிதாக்கியுள்ளதாக N.P.C.I. குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான சிக்கல்கள் தீர்க்கப்பட்டாலும் மத்திய அமைப்பு மற்றும் சில வங்கிகளில் உள்ள செயல்முறைகளில் சில சிக்கல்கள் தொடர்ந்து காணப்படுவதாகவும், சுமூகமான காசோலை தீர்வு அனுபவத்தை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக N.P.C.I. தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்