இந்தியா

வங்கி ஊழியரை பிடித்து சரமாரி உதை.. ராஜ்தாக்கரே கட்சியினரால் மகாராஷ்டிராவில் பரபரப்பு

தந்தி டிவி

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள வங்கியில் நவநிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டு, வங்கி ஊழியரை தாக்கிய காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.

நாக்பூர் மவுன்ட்ரோடில் செயல்படும் ஒரு வங்கியில், இந்திரஜித் பலிராம் முலே என்பவர் கடன் பெற்று ஜே.சி.பி இயந்திரம் வாங்கியுள்ளார். இவர் கடனை திரும்பச் செலுத்த தவறியதால், அந்த இயந்திரத்தை வங்கி பறிமுதல் செய்து ஏலம் விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நபர், இதுதொடர்பாக நவநிர்மாண் சேனா உதவியை நாடியுள்ளார். இதையடுத்து வங்கிக்குச் சென்று வன்முறையில் இறங்கிய ராஜ்தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியினர், வங்கி வளாகத்தை சேதப்படுத்தி ஊழியரை தாக்கியதால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியினர் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை