இந்தியா

ஆக்ராவை சுத்திவரும் ராட்சத பலூன் - பாதுகாப்பு துறை போட்ட அதிரடி உத்தரவு...!

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், வெப்பக்காற்று நிரப்பப்பட்ட ராட்சத பலூன் சவாரி தொடங்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அனுமதியுடன் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 5 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக்கூடிய வகையில் பலூன் வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 2 ஆயிரம் அடிக்குமேல் பலூன் பறக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 6 பேர் வரை ராட்சத பலூனில் பயணித்து, இயற்கைக் காட்சிகளை கண்டுகளிக்கலாம் என்றும், நபருக்கு சுமார் 13 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்