இந்தியா

அயோத்தி வழக்கு : 18 சீராய்வு மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டுள்ளது. அயோத்தி வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி இருந்தது. சர்ச்சைக்குரிய 2 புள்ளி ஏழு ஏழு ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என அறிவித்த உச்சநீதிமன்றம், மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து, உத்தரவு பிறப்பித்தனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்