இந்தியா

அயோத்தி வழக்கு : 18 சீராய்வு மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டுள்ளது. அயோத்தி வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி இருந்தது. சர்ச்சைக்குரிய 2 புள்ளி ஏழு ஏழு ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என அறிவித்த உச்சநீதிமன்றம், மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து, உத்தரவு பிறப்பித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை