இந்தியா

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: தொழில் நிறுவன தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது

தந்தி டிவி

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூர், பல்வேறு நிறுவனங்களுக்கும் கடன் அளித்த வகையில், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்காக, ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரையும் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்ஸெல் குழம தலைவர் சுரேஷ் சந்திரா, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், இந்தியாபுல்ஸ் நிறுவனர் சமீர் கெலாட் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்