இந்தியா

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: தொழில் நிறுவன தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது

தந்தி டிவி

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூர், பல்வேறு நிறுவனங்களுக்கும் கடன் அளித்த வகையில், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்காக, ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரையும் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்ஸெல் குழம தலைவர் சுரேஷ் சந்திரா, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், இந்தியாபுல்ஸ் நிறுவனர் சமீர் கெலாட் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி