இந்தியா

வருமான வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு..

குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்றால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

தந்தி டிவி

2018-19 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31-ந் தேதி கடைசி நாள்.

வருமானவரி சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 234F பிரிவின் படி, ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரியை செலுத்தாதவர்களிடம் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

5 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள், வருமானவரி கணக்கை ஜூலை 31-க்கு பிறகு 2019 மார்ச் மாதத்திற்குள் தாக்கல் செய்தால், அவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆண்டு வருமானம் உடையவர்கள், ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும் போது அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும்.

டிசம்பர் 31-ஆம் தேதி வரை வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள், அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும் போது, அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும், மதிப்பீட்டு ஆண்டு 2018-19 என இருப்பின், 31.03.2019-க்கு பிறகு வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?