* டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சி.பி.ஐ. ஒரு பிரதான விசாரணை அமைப்பு என்றும், அதன் நேர்மையை பாதுகாக்கவும், நியாயமான விசாரணை நடைபெறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சி.பி.ஐ. -யின் இரண்டு உயர் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், நேர்மையாக விசாரணை நடைபெறவே, 2 அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
* இந்த விவகாரத்தில், முழு விசாரணையை கண்காணிக்கும் முழு அதிகாரத்தை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.