இந்தியா

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம் : ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு சம்மன்

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அழைப்பு அனுப்பியுள்ளது.

தந்தி டிவி
வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கியதால் யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து , பின்னர் தளர்த்திக் கொண்ட நிலையில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை புகாரில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், விசாரணை நடத்த அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு