இந்தியா

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம் : ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானிக்கு சம்மன்

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அழைப்பு அனுப்பியுள்ளது.

தந்தி டிவி
வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கியதால் யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து , பின்னர் தளர்த்திக் கொண்ட நிலையில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை புகாரில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், விசாரணை நடத்த அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி