இந்தியா

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம் - விசாரணைக்கு நேரில் ஆஜரான அனில் அம்பானி

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி நேரில் ஆஜரானார்.

தந்தி டிவி

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி நேரில் ஆஜரானார். யெஸ் வங்கியில், அந்த வங்கியின் நிறுவனர் ராணா கபூர் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை