Andra Pradesh Jail | ஜெயில் வார்டனை சுத்தியலால் தலையில் அடித்து தப்பிய கைதிகள் - ஆந்திராவில் அதிர்ச்சி
ஆந்திர பிரதேச மாநிலத்தில், சமையறையில் இருந்த இரு கைதிகள் ஜெயில் வார்டனை சுத்தியலால் தலையில் அடித்து தப்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம், சோடாவரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிளைச்சிறையில், சமையல் அறையில் இருந்த ஒரு கைதி, சிறை காவலர் அசந்த நேரத்தில் அவர் தலையில் சுத்தியளால் அடித்து, இரு குற்றவாளிகள் தப்பித்து சென்றனர். தலையில் ரத்தம் சொட்டிய நிலையில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ரு வருகிறார். பென்சன் பணத்தை ஏமாற்றியது மற்றும் திருட்டு வழக்குகளில் சிறைக்குள் இருந்த இரு குற்றவாளிகளை போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.