இந்தியா

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அசோக் கெலாட்

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக, எதிர்கட்சி தலைவர்கள், வருகிற 22 ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அசோக் கெலாட், ஆந்திர மாநிலம், அமராவதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, சந்தித்தார். அப்போது வரும் 22 ஆம் தேதி, எதிர்கட்சி தலைவர்கள், டெல்லியில் ஆலோசனை நடத்த இருப்பது குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பாக, எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் சந்தித்து வந்தனர். இந்நிலையில், வருகிற 22 ஆம் தேதி, நடக்க உள்ள கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்