இந்தியா

ஆந்திரா டூ மகாராஷ்டிரா.. மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தல்... சிக்கிய 2 குற்றவாளி

தந்தி டிவி

ஆந்திராவில் இருந்து மகாராஷ்டிராவுக்கு பீதர் வழியாக, கஞ்சா கடத்தப்படுவதாக, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாடு குழு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பீதர் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தினர். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற லாரியை, தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், சரக்குகளுக்கு இடையே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,596 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து பீதர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சென்ன பசவண்ணா லங்கோடி கூறுகையில், லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் கைது செய்யப்பட்டதாகவும், தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த ஜனவரியிலும், கஞ்சா கடத்தல் வழக்கில் இதே லாரி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பிப்ரவரி 14ல் நீதிமன்றம் மூலமாக லாரியை மீட்டு சென்றவர்கள் மீண்டும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்