இந்தியா

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது

ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர கூடுதல் டிஜிபி ரவிசங்கர் அய்யனார் வார விடுமுறை தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டி மொத்தம் 19 விடுமுறை மாடல்களை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறினார். இதில் அந்தந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை உள்ள போ​லீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட உள்ளதாகவும், வார விடுமுறை நாட்களில் சிப்ட் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். விசாகப்பட்டினம், கடப்பா, பிரகாசம் மாவட்டத்தில் சோதனை முறையில் வார விடுமுறை அமல்படுத்தப்பட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி