இந்தியா

ஆந்திராவில் ஆற்று மணல் எடுக்க தடை...

ஆந்திராவில் மணல் அள்ளுவதற்கு அம்மாநில அரசு தடை செய்துள்ளது.

தந்தி டிவி
ஆந்திராவில் மணல் அள்ளுவதற்கு அம்மாநில அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுரங்கத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மணல் முறைகேட்டை தடுக்கும் விதமாக, தற்போதுள்ள மணல் எடுக்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மணலை இலவசமாக எடுத்துக் கொள்ளும் சட்டத்தை பயன்படுத்தி வெளி மாநிலங்களுக்கு முறைகேடாக மணல் கடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்ற பின்னர், மணல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி வெளியிட்டுள்ள செய்தியில், தற்போதுள்ள மணல் கொள்கை ரத்து செய்யப்படுவதாகவும், புதிய கொள்கை ஜூலை 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி