இந்தியா

மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திர எம்.எல்.ஏ. உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பு

ஆந்திராவில் மா​வோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எம்எல்ஏ-வின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

* ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ், விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது தொகுதிக்கு நேற்று சென்றபோது மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

* இந்த தாக்குதலில், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் உயிரிழந்தார். பெண்கள் உட்பட சுமார் 40 மாவோயிஸ்டுகள் கூட்டமாக வந்து இந்த தாக்குதலை நடத்தினர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

* இதற்கிடையே, அங்குள்ள தும்ரிகூடா காவல்நிலைய உதவி ஆய்வாளர் அம்மாராவ் சஸ்பெண்ம் செய்யப்பட்டுள்ளார்.

* இந்நிலையில், சர்வேஸ்வர ராவின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு, இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அரகு பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

* விசாகப்பட்டினம் மாவட்டம் பாடேரு பகுதியில் சர்வேஸ்வர ராவ், சிவேரி சோமா இருவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. இதற்கிடையே, விசாகப்பட்டினத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு